நெடுக ஒரு
நெடிய கொடும்
பிளக்கப்பட்ட
இரு வேறு
கொள்கைகளும்
இதற்க்கான
விவாதங்களும்
யுத்தங்களும்
தர்க்கங்களும்
ஓயாமல்
இடைப்பட்ட
புரியாமையின்
மனதும்
வறுமையின்
காய்ந்த வயிறும்
இதற்க்கான
சோகங்களும்
சிக்கல்களும்
முடிச்சிட்டு நிற்கும்
ஒரு புரட்சிக்கான தாகம்...!
மனதும் உடலும்
சோர்ந்தவர்களை
தேற்றுவது ....!
அதைவிட இங்கே
பேசுவதற்கும்
விவாதிப்பதற்குமான
கோடுகளுக்கும்
பல்வேறு கொள்கைகளுக்கும்
பஞ்சமில்லை ...
வறுமை சிலருக்கு
நிரந்தரமாகவே
இருக்கட்டும்
அவர் முதுகில் தான்
எங்கள் சுமைகள் இருக்கும்
அதை பரிதாபத்துடன்
பார்த்துக்கொண்டே
நாங்கள் உள்ளார்ந்து சிரிப்போம்...!
ஏனனில் எங்களுக்கு
அவர்கள் வலி தெரியாது
தெரிந்ததோ
சில நெடிய கோடுகளும்
பிளக்கப்பட்ட கொள்கைகளும்..!!!
கலாசுரன்
No comments:
Post a Comment